சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன் இணைந்து இந்த உணவகம் கடந்த சனிக்கிழமை (09) பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.இந்த சுழல் உணவகம் நேற்று (11) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டது.
இந்த உணவகத்தின் வருவாயில் 80% தாமரை கோபுரத்திற்கும் 20% சிட்ரஸ் ஹோட்டலுக்கும் உரித்தாகுமென தெரியவந்துள்ளது. இதில், ஏழு நாடுகளின் உணவு வகைகள் உள்ளன. மேலும்,
இருநூறு பேர் சாப்பிடும் வகையில் இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையும் மற்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையும் இந்த உணவகம் திறந்திருக்கும். இங்கு உணவருந்த, தொலைபேசி அல்லது ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதலாவது சுழலும் உணவகம் இதுவாகும்.