Saturday, April 27, 2024
Home » மேற்குக் கரையில் 6 பலஸ்தீனர்கள் பலி

மேற்குக் கரையில் 6 பலஸ்தீனர்கள் பலி

by gayan
December 9, 2023 7:00 am 0 comment

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அகதி முகாம் ஒன்றில் இஸ்ரேலிய துருப்புகள் ஆறு பலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

நப்லுஸில் இருந்து வடக்காக 17 கிலோமீற்றர் தொலையில் இருக்கும் பாரா அகதி முகாமை இஸ்ரேலிய படை நேற்றுக் காலை சுற்றுவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளது. இதன்போது குடியிருப்பாளர்கள் கற்களை எரிந்து எதிர்ப்பை வெளியிட்டிருப்பதோடு சில பகுதிகளில் துப்பாக்கிச் சண்டையும் இடம்பெற்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு ஜெரூசலம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மேலும் பல இடங்களிலும் இஸ்ரேலிய படை சுற்றிவளைப்புகளை நடத்தி பலரை கைது செய்துள்ளது.

இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேற்றவாசிகள் இந்த ஆண்டில் மேற்குக் கரையில் குறைந்தது 476 பலஸ்தீனர்களை கொன்றிருப்பதோடு, ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் 268 பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT