375
கலாவாவி நீர்த்தேக்கத்தில் நீராடிய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் இன்று (08) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் தேடுதல் நடத்தப்பட்டு சடலத்தை மீட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இபலோகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்