318
‘ஈழத்து சபரிமலை’ என அழைக்கப்படும் கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று (06) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய மஹோற்சவம் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை (13) இரவு 7.00 மணிக்கு சப்பரத் திருவிழாவும், வியாழக்கிழமை (14) காலை 10.00 மணிக்குத் தேர்த் திருவிழாவும், வெள்ளிக்கிழமை (15) முற்பகல் 10.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.
யாழ்.விசேட நிருபர்