186
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த சூரசம்ஹார நிகழ்வு, ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நேற்று (19) மாலை சிறப்பாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோவர்த்தன சர்மா தலைமையில் இந்த சூரசம்ஹார நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஆலய பரிபாலன சபையினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். ஆலய சுற்று வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சுமார் மூன்று மணி நேரம், கடும் சமர் இடம்பெற்றது.ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணத்துடன் கந்தசஷ்டி விரதம் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது. (காரைதீவு குறூப் நிருபர்)