Monday, April 29, 2024
Home » யாழில் மோசமான வானிலையால் திரும்பிச் சென்ற சென்னை விமானம்

யாழில் மோசமான வானிலையால் திரும்பிச் சென்ற சென்னை விமானம்

by Prashahini
November 14, 2023 8:51 am 0 comment

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் மோசமான வானிலையால் நேற்று (13) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10.15 மணியளவில் புறப்பட்ட விமானம் மோசமான வானிலையால் தரையிறக்க முடியாமல் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதோடு, விமானத்தில் மொத்தமாக 24 பயணிகள் பயணித்த நிலையில் அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் டிலக்சன் – யாழ்ப்பாணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT