Monday, April 29, 2024
Home » 15 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் பறிமுதல்

15 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் பறிமுதல்

- பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினர் திடீர் பரிசோதனை

by Prashahini
October 24, 2023 10:59 am 0 comment

முல்லைதீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தில் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினர் இன்று (24) அதிகாலை 2.00‌ மணியலவில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது சுமார் 15 இலட்சம் பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு மட்டுமன்றி நன்னீர் மீன் வளங்கள் உட்பட நீர் நிலைகளின் சூழலும் பாதிப்படைகின்றன. எனவே மீனவர்கள் பெருமளவு தொகை நிதியினை செலவு செய்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கினறோம் எனத் தெரிவித்த குமாரகுலசிங்கம் சங்கீதன் அவர்கள் கைப்பற்ற வலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT