எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவிற்கு, இன்று (19) முதல் 4 வார காலத்திற்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இடைநிறுத்தப்படுவதாக, சபாநாயகர் அறிவித்துள்ளார்.
வாய்மூல கேள்விக்கான பதில் வழங்கும் நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் எதிர்க்கட்சி எம்.பி. அஜித் மான்னப்பெருமவினால் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் டிரான் அலஸ் பதிலளிக்காது, அதனை அவையில் சமர்ப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.
மு.ப. 10.30 இற்கு வாய்மூல கேள்விகளுக்கான நேரம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்து அதனை ஆட்சேபித்திருந்தார். ஆயினும் அதனை வாய்மூலம் தெரிவிக்குமாறு எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அவையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும அவையில் செங்கோலை எடுக்கச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற அவை அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவிற்கு, இன்று (19) முதல் 4 வார காலத்திற்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இடைநிறுத்தப்படுவதாக, சபாநாயகர் அறிவித்தார்.