Saturday, April 27, 2024
Home » கட்டார் இலங்கைத் தூதுவருடன் ஸ்கை தமிழ் விருது குழு சந்திப்பு

கட்டார் இலங்கைத் தூதுவருடன் ஸ்கை தமிழ் விருது குழு சந்திப்பு

by mahesh
October 18, 2023 9:50 am 0 comment

கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் மற்றும் 2023 ஸ்கை தமிழ் விருது குழுவினருக்கிடையிலான சந்திப்பு அண்மையில் (15) கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது. தூதரக சிரேஷ்ட அதிகாரி ரஷீத் எம். பியாஸ் (நளீமி), ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித், ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி, தொழிலதிபர், சமூக செயல்பாட்டாளர் யாழினி குமார், என்.சி. நிகழ்வு திட்டமிடல் நிறுவனத்தின் பணிப்பளார் நிர்மலா சண்முகபாண்டியன் ஆகியோர்கள் சந்தித்தனர்.

தினகரன் மற்றும் வாரமஞ்சரி ஊடக அனுசரணையில் ஸ்கை தமிழ் ஏற்பாட்டில் அடுத்த மாதம் நவம்பர் 30ஆம் திகதி இந்திய கலாச்சார மையம் அசோகா ஹோலில் ஏற்பாடு செய்துள்ள ஸ்கை தமிழ் விருது விழாவிற்கு பிரதம அதிதியாக கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீனை அழைப்பதற்கு இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் விருது விழா சம்பந்தமாக ஆலோசனைகளை தூதுவர் வழங்கியிருந்தார். இன, மத வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் கொண்டு சேர வேண்டும் என்பதை அவ்விடத்தில் வழியுறுத்தி கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT