Saturday, April 27, 2024
Home » தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்க நீதிமன்றம் அனுமதி

தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்க நீதிமன்றம் அனுமதி

- தகனம் செய்வது பொருத்தமில்லை என விசாரணைக் குழு தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
October 16, 2023 1:33 pm 0 comment

மரணம் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் உடல் தோண்டி எடுக்கப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் உயிரிழந்தவரின் மனைவியினால் கொள்வனவு செய்யப்பட்ட காணித் துண்டில் அவரது சடலத்தை அடக்கம் செய்யுமாறும் கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் மருத்துவக் குழு, அவரது உடலை தகனம் செய்வது பொருத்தமற்றது என முன்வைத்த பரிந்துரைகளை ஆராய்ந்து நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி விசாரணையை மீண்டும் எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான், விசாரணைகளை மேற்கொண்ட ஐவரடங்கிய வைத்தியக் குழுவின் அறிக்கை அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக நீதவான் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT