Saturday, April 27, 2024
Home » தினேஷ் ஷாப்டரின் உடலை குடும்பத்தினரிடம் கையளிக்கவும்

தினேஷ் ஷாப்டரின் உடலை குடும்பத்தினரிடம் கையளிக்கவும்

- CID யினருக்கு கொழும்பு நீதவான் உத்தரவு

by gayan
September 26, 2023 6:00 am 0 comment

மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ்சாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரேதப்பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதால், தினேஷ் சாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்த மர்மம் இன்னமும் துலங்காதுள்ளது.இந்நிலையில்

மே 25 ம் திகதி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கீழ் தினேஷ் சாப்டரின் உடல் மீண்டும் எடுக்கப்பட்டது. வர்த்தகர் தினேஷ் சாப்டர் கடந்த வருடம் டிசம்பர் 15ம் திகதி பொரளை கனத்தையில் அவரின் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT