வவுனியா – மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தானது வவுனியா – மன்னார் வீதியில் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
வவுனியா, குருக்கள் புதுக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிளானது பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 45 வயதுடைய வி.ஜெயந்தினி என்பவர் பலியாகியுள்ளதுடன், 22 வயதான அவரின் மகன் விஜயரட்னம் சிவரோஜன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா விசேட நிருபர்