பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆத்தர், இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்த நிலையில் இலங்கை அணியின் பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இன்று (10) பாகிஸ்தனை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான திட்டங்களை வகுத்திருப்பதாக ஆத்தர் தெரிவித்துள்ளார். “அவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி எனக்குத் தெரியும். எனவே அவைகளை வைத்து நாம் திட்டங்களை வகுத்துள்ளோம்” என்று அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
மிக்கி ஆத்தர் 2019 டிசம்பர் தொடக்கம் 2021 நவம்பர் வரை இலங்கை அணியின் பயிற்சியாளராகச் செயற்பட்டுள்ளார்.
“அவர்கள் (இலங்கை) மிக ஆபத்தான அணி. எனவே அவர்களை வீழ்த்த நாம் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.