Sunday, April 28, 2024
Home » சமையலறையில் பலரையும் கொன்று புதைத்தவர் கைது

சமையலறையில் பலரையும் கொன்று புதைத்தவர் கைது

by sachintha
September 8, 2023 11:14 am 0 comment

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் தமது வீட்டின் சமையலறையில் குழியைத் தோண்டி 10க்கும் மேற்பட்ட சடலங்களைப் புதைத்தவர் என்று நம்பப்படும் ஆடவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

34 வயது ஆடவர் நபர்களை இரவுக்கூடத்தில் சந்தித்து அவர்களை வாடகைக்குத் தங்கும் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மொத்தம் 14 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஜூலை மாதத்தில் கொள்ளை, பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது ஆடவரின் வீடு சோதிக்கப்பட்டதில் சமையலறையில் குழி தோண்டப்பட்டு அதில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. பிரபல தொடர் கொலைகாரர்களைக் கண்டு கொலை செய்யக் கற்றுக்கொண்டதாக ஆடவர் தமது வாக்குமூலத்தில் கூறினார்.

சிலரின் உடலை அவர் அமிலத்தில் கரைத்ததாகக் கூறப்பட்டது.

கொலை செய்யத் திட்டமிட்டவர்களைக் கண்காணித்து வந்ததாகவும் நெருங்கிய குடும்பமோ நண்பர்களோ இல்லாதவர்களைக் குறிவைத்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT