டுபாயில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று (10) இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ஓட்டங்கள் சோ்க்க, அடுத்து ஆடிய பாகிஸ்தான் 47 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
முன்னதாக நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான், களத்தடுப்பை தோ்வு செய்தது. இந்திய பேட்டிங்கில் ஆதா்ஷ் சிங் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 62 ஓட்டங்களும், தலைவர் உதய் சஹாரன் 5 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களும், சச்சின் தாஸ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 58 ஓட்டங்களும் அடிக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் சரிந்தனா். பாகிஸ்தான் கந்துவீச்சில் முகமது ஜீஷான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னா் பாகிஸ்தான் இன்னிங்ஸில் ஷாஜாயிப் கான் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 63, அஸான் அவைஸ் 10 பவுண்டரிகளுடன் 105*, தலைவர் சாத் பெய்க் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68* ஓட்டங்களுடன் அணியை வெற்றி பெறச் செய்தனா். இந்திய பந்துவீச்சாளர்களில் முருகன் அபிஷேக் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
தற்போது, குரூப் ‘ஏ’-வில் பாகிஸ்தான் 2 ஆட்டங்களில், 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்க, இந்தியா 2 ஆட்டங்களில் 1 வெற்றியுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. இதனிடையே, இதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வென்றது.