மாத்தறை புனித தோமஸ் கல்லூரி மற்றும் மாத்தறை ராகுல கல்லூரிக்கு இடையிலான வருடாந்த ‘தங்கச் சமர்’ கால்பந்து போட்டி 19 ஆவது முறையாக மாத்தறை உயன்வத்த கால்பந்து மைதானத்தில் இன்று (01) பிற்பகல் 2.30க்கு நடைபெறவுள்ளது.
2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கால்பந்து போட்டியில் புனித தோமஸ் கல்லூரி 08 போட்டிகளிலும் ராகுல கல்லூரி 09 போட்டிகளிலும் வெற்றியீட்டியதோடு கடந்த ஆண்டு வெற்றி ராகுல கல்லூரிக்கி கிடைத்தது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 17 ஆவது தங்கச் சமர் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நாட்டில் இருந்த கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை.
இம்முறை கால்பந்து தொடரில் போட்டியை நடத்தும் பாடசாலையாக ராகுல கல்லூரி செயற்படுவதோடு ராகுல கல்லூரி அதிபர் சமித் குருகுலசூரிய, புனித தோமஸ் கல்லூரி அதிபர் பீ.ஏ. வீரக்கொடி ஆகியோரின் வழிகாட்டலில் புனித தோமஸ் கல்லூரி பயிற்சியாளராக கயன்திக்க ரணசிங்க, விசேட பயிற்சியாளராக பிரின்ஸ் போது, ராகுல கல்லூரியின் பயிற்சியாளராக ஏ.பி. வீரப்புலி அகியோர் செயற்படுகின்றனர். புனித தோமஸ் அணியின் தலைவராக டீ.டி. தம்ரு வத்சிலு மற்றும் ராகுல கல்லூரி அணியின் தலைவராக கே.பீ. ரவிது சமீர செயற்படுகின்றனர்.
நுவன் கொடிகார