Home » இந்தியாவின் விண்வெளி துறை முதலீடு அதிகரிப்பு

இந்தியாவின் விண்வெளி துறை முதலீடு அதிகரிப்பு

by manjula
February 10, 2024 1:16 pm 0 comment

இந்தியாவின் விண்வெளித் துறை முதலீடுகளில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த எட்டு மாதங்களில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

2040 ஆம் ஆண்டாகும் போது 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை விண்வெளித் துறைக்கான முதலீடுகளாக ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் தற்போதைய நிலவரங்களின் படி, அது 100 பில்லியன் டொலர்களைத் தாண்டக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் சி.எஸ்.ஐ.ஆர் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்திய விண்வெளித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் பயனாக கிடைக்கப்பெறும் முதலீடுகளில் பாரிய அதிகரிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பத்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி மிக்கதாகக் காணப்பட்ட இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் தற்போது 140 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்டதாக உள்ளது.

கொவிட் 19 பெருந்தொற்று காலப்பகுதியில் உலகின் பல நாடுகளிலும் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்ற எமது தடுப்பூசிகள் பெரும் பங்களிப்பை நல்கியுள்ளன. இன்று நோய் தவிர்ப்பு சுகாதாரப் பராமரிப்பில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் எமது நாடு விளங்குகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT