Saturday, April 27, 2024
Home » யாழ். காரைநகர் கடலில் 12 தமிழக மீனவர் கைது

யாழ். காரைநகர் கடலில் 12 தமிழக மீனவர் கைது

by damith
January 15, 2024 10:30 am 0 comment

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்களை, சனிக்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்படையினர் கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT