தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்ைககள் மீண்டும் ஒத்திவவைக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகம் வௌ்ளத்தில் மூழ்கியதால் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் (16) ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில்,நிலைமைகள் இன்னும் சீரடையாததால் மீண்டும் (21) வரை கற்றல் நடவடிக் கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.அதேவேளை, சேத விபரங்கள் மதிப்பிடுவதற்கும் பல்கலைக்கழகத்தை விரைவாக சுத்தப்படுத்தி மீளவும் ஆரம்பிப்பதற்கும் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழிகாட்டலும் வழங்கப்பட்டுள் ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(கல்முனை மத்திய தினகரன் நிருபர் )