Sunday, May 19, 2024
Home » மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுமென நம்புகின்றேன்

மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுமென நம்புகின்றேன்

by damith
January 15, 2024 10:19 am 0 comment

மலையக பெருந்தோட்ட சமூகத்தின் 200 வருட கால வரலாற்றை எடுத்துக்கொண்டால், போராட்டம் செய்துதான் உரிமைகளை பெற வேண்டியிருந்தது. இந்நிலையில்தான் தை பிறக்கின்றது. “தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த நம்பிக்கையில் முதலாவதாக சூரிய பொங்கல் வைத்துதான் வேலையை ஆரம்பிப்பார்கள். அதனால் சூரியனைப் போன்று தோட்ட சேவையாளர்களின் வரழ்விலும் பிரகாசித்து நல் வாழ்வு வாழ்வதற்கான சூழ்நிலை 2024 ஏற்பட வேண்டுமெனவும் பொதுவாக பெருந்தோட்ட மக்களின் வாழ்விலும் மாற்றம் ஏற்பட வேண்டுமென இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபட் பிரான்சீஸ் பொங்கல் திருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவி்த்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிப்பது தேயிலை, இறப்பர் ஆகும். கடந்த காலத்தை மறந்து புதிய ஆண்டில் பெருந்தோட்ட ஊழியர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுள்ளது.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT