நாட்டின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளை, வானத்திலிருந்து மர்மப் பொருள் விழுவதால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளை வானத்திலிருந்து அடையாளம் தெரியாத, சிலந்தி வலை போன்ற வெள்ளை நூல் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில் நேற்றுமுன் தினம் இந்த வெள்ளை சிலந்தி வலை விழுந்ததால், பாடசாலை ஒன்றை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வெள்ளைத் துண்டுகள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நேற்று முன்தினம் காலை திம்புலாகல, நுவரகல, யக்வெவ, யக்குரே, மன்னம்பிட்டிய, சிறிபுர போன்ற சுற்றுப்புற பகுதிகளிலும், வெலிகந்த நெலும்வெவ, மதுரங்கல உள்ளிட்ட அண்டைய கிராமங்களிலும் இந்த வெள்ளைப் பொருட்கள் விழுவதை மக்கள் அவதானித்துள்ளனர்.
காலை வேளை பொலன்னறுவை பிரதேசத்தில் இவை பெருமளவில் விழுகின்றன.இவற்றை,அப்பகுதியிலுள்ள மின் கம்பிகள் மற்றும் செடிகளில் பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.
வானிலிருந்து விழும் அடையாளம் தெரியாத இந்த வெள்ளைப் பொருட்கள் சில நொடிகளில் கரைந்துவிடுவதாக பொலன்னறுவை உள்ளிட்ட அண்டை கிராம விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.