Monday, May 6, 2024
Home » ஸ்ரீல.சு.க. உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் ஐ.தே.க.வுடன் இணைவர்

ஸ்ரீல.சு.க. உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் ஐ.தே.க.வுடன் இணைவர்

பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

by Gayan Abeykoon
April 24, 2024 10:00 am 0 comment

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்களில் சிலர் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின மேடைக்கு வரவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டி, பாத்தஹேவாஹெட்ட தொகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த விடயத்தை தெரிவித்த அவர்,  ஐக்கிய தேசியக் கட்சி தனது வரலாற்றிலேயே பாரிய மே தினக் கூட்டத்தை இம்முறை நடத்த இருப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட குழுவினர் உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும், இந்த நேரத்தில் இவர்கள் மேற்கொள்ளக்கூடிய சரியான நடவடிக்கை ஐ.தே.க.வுடன் இணைவதே என்றும் அவர் தெரிவித்தார்.

யார் எதனை கூறினாலும் வாக்குச் சீட்டில் பொது ஜன பெரமுனவின் சின்னம் இருக்க வேண்டுமென்று கூறுபவர்கள் அந்த சின்னத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT