நுவரெலியாவில் ஏப்ரல் வசந்தகால விழாவை சிறப்பிக்கும் வகையில் “battle of little England” கிண்ணத்திற்கான மாபெரும் கடினப்பந்து கிரிக்கெட் போட்டி
இம்மாதம் 28,29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இம்மாதம் 28,29 ஆம் திகதிகளில் நுவரெலியா மாநகரசபை பொது மைதானத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி, மற்றும் காமினி தேசிய பாடசாலை அதிபர்கள் தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிசய மண்டபத்தில் நடைபெற்றது.ஊடகசந்திப்பில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி அதிபர் எம். ரவிச்சந்திரன் தெரிவிக்கையில்,
நுவரெலியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை பலப்படுத்தும் “battle of little England” கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டி பாரிய வெற்றியை தந்திருந்தது.
அதேபோல இவ்வாண்டுக்கான போட்டியையும் வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.