Monday, May 6, 2024
Home » நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காரில் திருட்டு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காரில் திருட்டு

by Gayan Abeykoon
April 24, 2024 9:59 am 0 comment

திம்புள்ள  – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொட்டகலை ஜெயராஜன் மாவத்தை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசுக் காரில் முகப்பு  மின்குமிழ்கள் இரண்டு திருடப்பட்டுள்ளன.உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக உள்ள மைதானத்தில்,  திங்கட்கிழமை (22) இரவு  நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார்   தெரிவித்தனர். திருடப்பட்ட  மின்குமிழ்கள் இரண்டும் அதிக பெறுமதியான வை என  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் திம்புள்ள  – பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT