67
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் இடம் பெற்ற காணிப்பிரச்சினை தொடர்பான மோதலில் காயமடைந்த நால்வர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் (21) கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்டகாமாக இருந்து வந்த காணிப்பிரச்சினை வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்து மோதமலாக மாறியுள்ளது.
இதன் போது இரு தரப்பிலும் நால்வர் காயமடைந்துள்ளனர். ஒரு தரப்பில் தந்தையும் மகனும் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய தரப்பில் 17 மற்றும் 26 வயது இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.