54
அநுராதபுரம் ருவன்வெலிசாயாவுக்கு சமய நடவடிக்கைகளுக்காக வந்த தெஹியத்தகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் தங்கம், பணம் போன்றவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
தமது சமய நடவடிக்கைகளுக்காக வந்து இங்குள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் தமது வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வாகனத்திற்குள் தமது தங்கம் மற்றும் வங்கி அட்டை போன்றவற்றை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்ற பின்பே இனம் தெரியாத கள்வர்கள் குழுவொன்று வாகனத்தின் கதவை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளனர்.
திறப்பனை தினகரன் நிருபர்