49
தர்மசக்தி அமைப்பு, கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்த தான முகாமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இரத்த தான முகாம் நாளை 25 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09 மணி தொடக்கம் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்த தான முகாமில் அனைவரையும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்க முன்வருமாறு தர்மசக்தி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ருமைஸ் தெரிவித்தார்.
புத்தளம் தினகரன் நிருபர்