51
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டானிச்சூர் அரச பாடசாலையை அண்மித்த பகுதியில் நேற்றுமுன்தினம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்இவ்விபத்தல் துரைசாமி லலிதராசா என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா விசேட நிருபர்