ஒரு பெண்ணை வலுப்படுத்தல் என்பது ஒரு தேசத்தையே வலுப்படுத்துவதாகும். இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அதன் ஆழமான விழுமியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில், சியபத பினான்ஸ் பிஎல்சி நாடு முழுவதும் உள்ள பெண்களின் கூட்டுப் பலம், சக்தி மற்றும் அவர்களது சாதனையைக் கொண்டாட ஒன்றாக இணைந்தது.
தலைமைப் பொறுப்பை ஏற்பதில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில், சியபத பினான்ஸ் பிஎல்சி, புகழ்பெற்ற கூட்டாண்மை மற்றும் தனிப்பட்ட பயிற்சியாளர் இருஷி அலுவிஹாரேவினால் ‘’உயர்வு, பிரகாசம், மற்றும் செழிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு சிறப்புச் செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
சியபத பினான்ஸ் பிஎல்சி, உள்ளுர் நிறுவனத் துறையில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளதோடு, செழிப்பானதொரு பணிச்சூழலை தம் பணியாளர்களுக்கு வழங்குகிறது. மேலும் தடைகளைத் தகர்த்தெறிந்து, நாட்டின் எதிர்காலத்தை மறுவடிவமைக்க, பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கி அவர்களை பெருமைப்படுத்துவதை தொடக்கத்திலிருந்தே மேற்கொண்டு வருகிறது.
தொழில்துறையில் உள்ள தலைவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக, நிறுவனம் தனது கொள்கைக்கு ஏற்ப அனைத்து தரங்களிலும் தனது ஊழியர்களில் 40% பெண்களின் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளது. அதே போல் பாலினம் மற்றும் பிற சமூக விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல் வளர்ச்சிக்கு சமமான வாய்ப்பை உருவாக்குவது, ஒரு வலுவான மற்றும் தகுதியான அணிக்கு வழிவகுக்கும் என்பதிலும் நம்பிக்கை வைத்துள்ளது.
அதுமட்டுமல்லாது சியபதவின் வாடிக்கையாளர்கள் மத்தியில் 23% பெண்களின் பிரதிநிதித்துவம், மீள்திறன்மிக்க பொருளாதாரம் மற்றும் இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அதன் பார்வைக்கு மேலும் சான்றாகும்.
2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, சியபத பினான்ஸ் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளிவரும் பெண் தொழில்முனைவோரின் முயற்சிகளுக்கு பங்களித்துள்ளது. இந்த சர்வதேச மகளிர் தினத்தில், நிறுவனம் ‘’சியபத பினான்ஸ் லியக மஹிம” என்ற தொனிப்பொருளின் கீழ் பல வேலைத்திட்டங்களைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.