திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரபின் ஏற்பாட்டில் பொத்துவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் அண்மையில் இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், பிரதேச செயலாளர்கள், சமயத் தலைவர்கள், உலமாக்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.
இங்கு ரமழான் மார்க்கச் சொற்பொழிவை சபிலுர் ரஸாத் அரபுக் கல்லூரி அதிபர் எம்.எம்.அப்துல் கையும் துஆப் பிரார்த்தனையை எம்.எஸ்.ஹுஸைன் ரஸாதி நிகழ்த்தினர்.
(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)