Monday, April 29, 2024
Home » அரிசி, பூடு, கிழங்கு, பருப்பு, மிளகாய் உட்பட பொருட்கள் விலை குறைப்பு
புத்தாண்டுக்காக லங்கா சதொசவில்

அரிசி, பூடு, கிழங்கு, பருப்பு, மிளகாய் உட்பட பொருட்கள் விலை குறைப்பு

by mahesh
April 10, 2024 7:15 am 0 comment

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோரின் நன்மை கருதி பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையை லங்கா சதொச குறைத்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பை மேற்கொண்டுள்ளதாக, லங்கா சதொச அறிவித்தது.

ஒரு கிலோ செத்தல் மிளகாய் 300 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 850 ரூபாவாகும்.

இதேவேளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 375 ரூபாவாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 445 ரூபாவாகும். ஒரு கிலோ வௌ்ளைபூடு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 680 ரூபாவாகும். ஒரு கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 165 ரூபாவாகுமென லங்கா சதொச தெரிவித்தது.

மைசூர் பருப்பை 07 ரூபாவாலும் வெள்ளை அரிசியை 03 ரூபாவாலும் குறைக்கவுள்ளதாகவும், லங்கா சதொச மேலும் தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT