102
2024ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று 10ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
அரசாங்க பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இது பொருந்துமென்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.