152
ரமழான் பண்டிகையையிட்டு
பள்ளிவாசல்களின் பாதுகாப்புக்கு 5,580 பொலிஸார் கடமையில்
ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் பணித்துள்ளார்.
நாளை வியாழக்கிழமை (11) ரமழான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 2,453 முஸ்லிம் பள்ளிவாசல்களில் பாதுகாப்பு கடமைக்காக 5,580 பொலிஸாரும் 510 விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஆகியோர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.