242
நாளை (04) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
ஒரு சில இடமாற்றங்கள் தொடர்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய குழுவினால் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.