Sunday, May 12, 2024
Home » இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம்

இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம்

- பேரவையின் புதிய தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு

by Prashahini
April 4, 2024 3:59 pm 0 comment

இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் (SLICC 2024) அண்மையில் கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் ராஜூ சிவராமன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான நகர்வுகளுக்கான உறவு பாலமாக திகழும் முக்கிய அமைப்பே இதுவாகும்.

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முன்னாள் தலைவர் சிவராமன் மற்றும் பேரவையின் உயர்மட்ட உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே தலைமைப்பதவியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுள்ளார்.

இந்த நிகழ்வில் போசகர் ராஜூ சிவராமன், பொருளாளர் கே. செல்வகுமார், பொதுச்செயலாளர் அருணாச்சலம் பால்ராஜ், இலங்கை – இந்திய சமுதாய பேரவையின் காப்பாளரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான குமார் நடேசன் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவது, இளம் தொழில் அதிபர்களை உருவாக்குவது மற்றும் இளம் தொழில் முனைவோரை அடையாளம் காணும்போது மலையகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இந்த இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளன.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT