143
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பௌண்டேஷன் இம்முறையும் புனித நோன்பை முன்னிட்டு கொழும்பு பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் (27) பகிர்ந்தளிக்கப்பட்டன. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான சவூதி அரேபிய துாதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி சவூதி அரேபிய பேரீத்தம் பழங்களை கொழும்பு வாழ் வறிய மக்களுக்கு பகிர்ந்தளித்தார். இந் நிகழ்வில் அசாத் சாலி பௌண்டேஷனினால் உலர் உணவுப் பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அஷ்ரப் ஏ சமத்)