113
வடபகுதி விவசாயிகளின் மின்கட்டணத்தை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயம் தொடர்பில் வடபகுதி விவசாயிகள் காண்பிக்கும் அர்ப்பணிப்பை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கையென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியில் அதிகளவான நிதியை வடக்குகிழக்கு அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒதுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.