காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட நூலகம் நேற்று (25) திங்கட்கிழமை காலை மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
செலான் வங்கியின் செலான் பெஹஸர திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 299 வது நூலகமாக இப்பாடசாலை நூலகம் விளங்குகின்றது.
பாடசாலை அதிபர் திருமதி நயிமா அப்துஸ் சலாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செலான் வங்கி உதவி முகாமையாளர் றுவான் பெர்னாண்டோ பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில் காத்தான்குடி பிரதேசக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஜி.எம்.ஹக்கீம் உட்பட செலான் வங்கியின் அதிகாரிகள் முகாமையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நூலகத்தின் நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்டது.
இந்நூலகத்துக்கு செலான் வங்கியினால் மடிக்கணினியும் வழங்கப்பட்டது
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் )