கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ்.முரளீதரன் அண்மையில் விஜயம் செய்தார்.
அங்கு தங்கியிருந்து சிகிச்சைகளைப் பெற்றுவரும் நோயாளர்களுக்கு தேவையான பாவனைப்பொருட்களை திருகோணமலை ‘காப்போம்” தொண்டு நிறுவனத்தினர் வழங்குவதற்கு ஏற்பாடுசெய்திருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவும் வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகளை கண்காணிப்பதற்காகவும் இவர் இப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.
திருகோணமலையை தளமாக கொண்டு செயற்பட்டாலும் நாட்டின் சகல பாகங்களிலும் இருக்கக்கூடிய தேவையுள்ள மக்களை நாடிச்சென்று மனிதாபிமான உதவிகளை வாரிவழங்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாக ‘காப்போம்’ நிறுவனம் செயற்பட்டுவருகின்றது.
(மட்டக்களப்பு குறூப் நிருபர்)