127
ஹற்றன் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா நேற்று 25ஆம் திகதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க மிக சிறப்பாக நடைபெற்றன. விசேட பூஜைகள் இடம்பெற்று, அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் நுவரெலியா மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர். மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்ட ஹற்றன் கல்வி வலயத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையும் வழங்கப்பட்டிருந்தது.
(ஹற்றன் விசேட நிருபர்)