158
பட்டிருப்பு வலயக் கல்வி வலயத்துக்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலாந்த வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா திருப்பழுகாமம் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் சி.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது மேலும் பட்டிருப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.ஜெ.பிரியதர்சன், பு.திவிதரன், நேசகஜேந்திரன் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)