முட்டைக்குழம்பு கேட்டு, அதனை செய்துகொடுக்க மறுத்த ஆசை காதலியை காதலன் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் இந்தியாவின் அரியானா மாநிலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா, குருகிராம் பகுதியைச் சேர்ந்த லாலன் யாதவ் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். 35 வயதாகும் லாலன் ஏற்கனவே திருமணமானவர். இவரது மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டநிலையில் இவர் அஞ்சலியுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று லாலன் மது போதையில் அஞ்சலியிடம் முட்டைக்குழம்பு சமைத்துக் கொடுக்குமாறு ஆசையாகக் கேட்டுள்ளார்.
ஆனால், அஞ்சலி முட்டைக்குழம்பு செய்து தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லாலன் சுத்தியல் மற்றும் பெல்ட்டால் ஆசை காதலி அஞ்சலியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த அஞ்சலி அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், போதையில் மயங்கிக் கிடந்த லாலனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.