Thursday, May 9, 2024
Home » தமிழ்பேசும் மக்கள் உள்ளத்தில் ஒளியேற்றியவன் தினகரன்!

தமிழ்பேசும் மக்கள் உள்ளத்தில் ஒளியேற்றியவன் தினகரன்!

by damith
March 18, 2024 1:04 am 0 comment

தேன் தமிழ்
பேசும் தினகரனே!
இலங்கை சூழ்ந்த
இருள் அகற்றவும்,
காரிருள் கலையவும்
கதிரவனாக
உருவெடுத்தவனே!
விஜயன் குறி பார்த்த
அம்பு போன்று,
அமரர் விஜேவர்தன
கையிலெடுத்த
தினகரன் என்ற அம்பும்
தமிழ் மக்களின் மனங்களில்
உண்மைகளை விளம்பியது!
தசாப்தங்கள் ஒன்பது
தாண்டி இன்று வரை,
வானத்தின்
தினகரன் போலவே
தமிழ்பேசும் மக்களின்
உள்ளத்தில்
ஒளியேற்றுகின்றாய்!
மூவின இனங்களை
ஒன்றாக்கி, ஒருதாயின்
பிள்ளைகளாய்
எழுத்தால்
ஒன்றிணைத்துள்ளாயே!
கட்டுரையால் வழிகாட்டும்
ஊடகக் கலையை
பல்வேறு ஆக்கசிந்தனையால்
அலங்கரித்தவனே!
உரைநடையால்
தேசியப்பற்றை
உருவாக்கியவனே!
இலைமறைகாய் கவிஞர்களை
கவி பாட வைத்தவனே!
ஆய்வு கட்டுரைகளால்
மக்கள் மனங்களில்
விளக்ேகற்றியவனே!
வார்த்தைகளால் உன்
புகழ்பாட இயலாது!
ஏரிக்கரை வீடு
பெற்றெடுத்த உனக்கு
இன்று அகவை
தொண்ணூற்று இரண்டு,
இன்னும் இளமை மாறாது
வெற்றியுடன்
பயணிக்கின்றாய்!
எத்தனை வார்த்தைகள்
புனைந்தாலும்
உன் புகழ் பாடுவதற்கு
வார்த்தைகளுக்கு
பஞ்சமில்லை!

கவி பாரதி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT