Thursday, May 9, 2024
Home » SLvBAN 3rd ODI: இறுதி போட்டியிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

SLvBAN 3rd ODI: இறுதி போட்டியிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

- பயிற்சியின் போது காலில் உபாதை

by Prashahini
March 17, 2024 10:07 pm 0 comment

– விளையாடும் அளவுக்கு உடல் தகுதி இல்லை

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து மற்றுமொரு பிரபல வீரரும் விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான Tanzim Hasan Sakib உபாதை காரணமாக இறுதியில் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற பயிற்சியின் போது அவரது காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, நாளைய போட்டியில் விளையாடும் அளவுக்கு அவருக்கு உடல் தகுதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உபாதை காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுஷங்கவும் நாளைய போட்டியில் விளையாடமாட்டார் என சிறிலங்கா கிரிக்கெட் இன்று காலை அறிவித்தது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் நாளைய (18) போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT