Saturday, April 27, 2024
Home » சுவர் இடிந்து விழுந்ததில் 18 வயது இளைஞன் பலி

சுவர் இடிந்து விழுந்ததில் 18 வயது இளைஞன் பலி

by Gayan Abeykoon
March 1, 2024 1:00 am 0 comment

உடப்பு, பெரியகொலனி ஆண்டிமுனை பகுதியில் பழைய வீட்டு சுவர் பகுதியை உடைத்த நேரம் சீமெந்து கல் விழுந்து ஒருவர் இறந்த  சம்பவம் வியாழக்கிழமை (29) மாலை வேளை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கணபதி பாக்கியம் என்பவரின் வீட்டுச் சுவரை  உடைப்பதில் ஈடுபட்டு வந்த முத்துசெல்வம் தனுஜன் (வயது-18)என்பவர், சுவரின் கல் விழுந்து பாரிய காயத்துடன் உடப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக  சிகிச்சைக்காக சிலாபம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.

 

உடப்பு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT