Home » இலங்கையர் இருவரை நாடு கடத்தியது சீனா

இலங்கையர் இருவரை நாடு கடத்தியது சீனா

by damith
February 26, 2024 6:15 am 0 comment

சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைத் தமிழரை சீனா, நாடு கடத்தியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோதே இவ்விருவரும் கைதாகினர்.

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த வெற்று கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்த இவர்கள், இருவரும் மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். கடந்த வருடம் ஜனவரி (30) கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “மெர்க்ஸ் யூனிகார்ன்” என்ற கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் இருவரும் இரகசியமாக நுழைந்துள்ளனர். கப்பல் மலேஷியாவை சென்றடைந்தபோது, அந்த கொள்கலனில் பதுங்கியிருந்த இருவரையும் ஏற்றுக்கொள்ள மலேஷியா மறுத்தது. பின்னர், இலங்கையருடன் கப்பல் சீனாவை சென்றடைந்தபோது இவர்கள் இருவரையும் சீன அதிகாரிகள் கைது செய்தனர்.

26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தர்மராசா ஆகியோரே நாடு கடத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT