Saturday, April 27, 2024
Home » தேசிய வேகநடைப் போட்டியில் துனுகர, மதிரிகா முதலாமிடம்

தேசிய வேகநடைப் போட்டியில் துனுகர, மதிரிகா முதலாமிடம்

by sachintha
February 20, 2024 9:38 am 0 comment

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் முதல் தடவையாக நடாத்தப்பட்ட 20 கிலோ மீற்றர் தேசிய வேகநடைப் போட்டியின் ஆடவர் பிரிவில் இலங்கை இராணுவத்தின் சந்தருவன் துனுகர மற்றும் மகளிர் பிரிவில் கல்ஹாரி மதிரிகா ஆகிய இருவரும் வெற்றியீட்டினர்.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற இப் போட்டியின் ஆடவர் பிரிவில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சந்தருவன் துனுகர முதலிடத்தைப் பிடித்தார். போட்டியை அவர் ஒரு மணித்தியாலம் 37.35 விநாடிகளில் நிறைவுசெய்தார்.

இதனிடையே மகளிர் பிரிவில் போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம், 51 நிமிடங்கள், 45 விநாடிகளில் நிறைவு செய்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கல்ஹாரி மதிரிகா வெற்றியீட்டினார்.

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய வேகநடை சம்பியன்ஷிப் தொடருக்கான தெரிவுப் போட்டியாக இந்தப் போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT