Tuesday, April 30, 2024
Home » இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் போராட்டம்

by Prashahini
February 20, 2024 3:46 pm 0 comment

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் இன்று (20) போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு மருதடி வீதி சந்தியில் இருந்து ஆரம்பமான மீனவர்களின் பேரணி இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்றபோது இடையில் பொலிஸாரால் மறிக்கப்பட்டது.

பின்னர் கடற்றொழில் அமைப்புக்களை சேர்ந்த 8 நபர்கள் மாத்திரம் இந்திய துணைத் தூதரகத்துக்குள் மகஜர் வழங்குவதற்காக அனுமதிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இன்று (20) முற்றுகையிடப்படும் என யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் கடந்த 18 ஆம் திகதி அறிவித்திருந்தன.

இதனால் இன்று காலை முதல் இந்திய துணைத் தூதரகத்தை சுற்றி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்ப கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT