ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நாளை (19) மற்றும் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெறும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளுக்கான அனைத்து விக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
கொழும்பு மற்றும் தம்புள்ளையில் அமைந்துள்ள டிக்கெட் கௌண்டர்கள் மூடப்பட்டிருப்பதாகவும் இந்த டிக்கெட் கௌண்டர்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டியை பார்வையிட அரங்கில் 18,000 ரசிகர்கள் கூடி இருந்தனர். இந்த பரபரப்பான போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.