சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து Immune Globulin தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேருக்கும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 02ஆம் திகதி கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பெப்ரவரி 03ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இன்று வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சுகவீனம் காரணமாக இன்றையதினம் (15) நீதிமன்றில் ஆஜர்படுததப்படவில்லை என, சிறைச்சாலைகள் திணைக்களம் நீதிமன்றிற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்டு மேலும் 6 பேருக்கும் எதிர்வரும் பெப்ரவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் இன்றையதினம் (15) உத்தரவிட்டார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி